கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து 04.07.2019 அன்று நடைபெற்றது.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திரு. நிஷாந்த், Examiner, முதன்மை மாவட்ட நீதிமன்றம் முதல் பரிசு பெற்றதோடு மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கோபிநாத் 2வது பரிசும் பெற்றார்.
செஸ் போட்டியில் நாகர்கோவில் உரிமையியல் நீதிமன்ற உதவியாளர் ஸ்பென்சர் அலெக்ஸாண்டர் முதல் பரிசு பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார்.
அதுபோல் கபடி போட்டியில் நீதித்துறை அணி முதலிடத்தை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு நீதித்துறைக்கு சிறப்பு சேர்த்த ஊழியர்களுக்கு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) திரு. கோமதி நாயகம் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.