தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (27.11.2020) காலை 10 மணிக்கு கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து சங்க கொடியேற்றி வைக்கப்பட்டு அதன்பின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் இசக்கியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் வேதமணி மற்றும் முன்னாள் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தோழர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுக்குழுவை சிறப்பு செய்தனர்.
பொதுக்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 🙏🙏
May 25