தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் 16.11.2019 சனிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணியளவில் மாநில தலைவர் தோழர். செந்தில் குமார் அவர்களால் கொடியேற்றி துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் *நீதித்துறையில் பணியாற்றி காலமான தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு சரியாக 10.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயலாளர் திரு. மங்கை மணவாளன் அவர்களால் வரவேற்புரை வழங்கி …