Author's posts
May 26
செயற்குழு கூட்டம் 12.01.2021
May 26
புரோவிடன்ஸ் ஹோம்
பெருஞ்சிலம்பு பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு (புரோவிடன்ஸ் ஹோம்) தேவையான தேங்காய், சோப்பு பவுடர், டெற்றால், லைசால், அடல்ட் டயப்பர், பேஸ்ட், சந்திரிகா சோப் முதலிய பொருட்கள் ரூபாய் 5000/- அளவில் வாங்கி கொடுக்கப்பட்டது. நிகழ்வில் அண்ணன் ராஜன் தம்பி பெஞ்சமின் ஜோஸ் மற்றும் ஐவர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதியுதவி செய்த ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
May 26
2021ம் வருட மேஜை நாள்காட்டி
நமது மாவட்ட சங்கத்தால் நமது சங்க செயலாளர் தோழர் ஜோஸ் அவர்களின் சீரிய முயற்சியால் வடிவமைக்கப்பட்ட 2021ம் வருட மேஜை நாள்காட்டி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பயன்படும் வகையில் அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் அவரே சென்று சேர்த்துள்ளார். முயற்சிக்கு பாராட்டுக்கள்👏👏
May 25
கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு (27.11.2020)
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (27.11.2020) காலை 10 மணிக்கு கல்குளம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து சங்க கொடியேற்றி வைக்கப்பட்டு அதன்பின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் இசக்கியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் வேதமணி மற்றும் முன்னாள் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தோழர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். …
Jun 28
தமிழ் புலவர் மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை – முன்னாள் நீதிமன்ற ஊழியர் – மரியாதை செய்த போது
மயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை இவர் ஒரு தமிழ் புலவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும், தமிழின் முதன் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை எழுதியவரும் இவரே இவர் ஒரு நீதிமன்ற ஊழியர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரெகார்ட் கீப்பர் ஆக பணிபுரிந்து, Thubash தற்போது Translator ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் மாயவரம் ஜட்ஜ் ஆகி பணி ஓய்வு பெற்றவர். இவருடைய சிலை மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ளது. இவர் 11.10.1826 …
Jun 27
கொரோனா தொற்று – உதவி கரம்
கொரோனா தொற்றால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நீதித்துறை ஊழியர்களிடமிருந்து முதல் கட்டமாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 15,000/-லிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 1,000/- அளவில் அன்றாட தேவைகளுக்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக ரூபாய் 21,000/- ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்டு அதனுடன் சங்க நிதியிலிருந்து …
Jun 27
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முக கவசம் வழங்கியது
நாகர்கோவில் சார்பு நீதிமன்ற ஊழியர் திருமதி. விஜயராணி அவர்களது முயற்சியால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவரகள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து பணியாற்ற அவராகவே முன்வந்து 15 முக கவசங்கள் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தயார் செய்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் திரு. மணிமுத்து கலந்து கொண்டார்.