11.01.2020 அன்று குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Dec 04
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு
ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது நீதித்துறைக்கும் பெருமை சேர்த்த நமது முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு. நிஷாந்த் அவர்களுக்கு 04.12.2019 புதன் கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வழங்கி திரு. நிஷாந்த் அவர்களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார். விழாவில் நமது ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Nov 16
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் 16.11.2019 சனிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணியளவில் மாநில தலைவர் தோழர். செந்தில் குமார் அவர்களால் கொடியேற்றி துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் *நீதித்துறையில் பணியாற்றி காலமான தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு சரியாக 10.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயலாளர் திரு. மங்கை மணவாளன் அவர்களால் வரவேற்புரை வழங்கி தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க *மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தோழர். வெங்கடேசன், நமது முன்னாள் மாநில தலைவர் தோழர். கருணாகரன், *முன்னாள் மாநில துணை தலைவர் மண்ணின் மைந்தர் தோழர். வேதமணி, கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் தோழர். லெக்ஷ்மண பெருமாள் ஆகியோருக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டு, எழுத்து மூலமாக வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் அறிக்கையின் மீது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த மாவட்ட நிர்வாகிகள் விவாதம் மேற்கொண்டனர். *மொத்தம் 25 மாவட்டங்கள் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட நிர்வாகிகளின் விவாதங்களின் அடிப்படையில் மாநில மையத்தால் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
மேலும் மாநில செயற்குழுவிற்கான காலை மற்றும் மதிய உணவு வகைகளை சிறந்த முறையில் சுவையாக அமைத்து தந்த தோழர் சங்கர் குமார் மற்றும் அவருடன் இணைந்து இரவெல்லாம் கண்விழித்து உதவி செய்த உணவு ஏற்பாடு குழு உறுப்பினர்கள் தோழர்கள் சிவா, பிரசாத், யோகேஸ்வரன், சுப்பிரமணி ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்களை சிறந்த முறையில் வரவேற்ற தோழர்கள் மணிமுத்து, மங்கை மணவாளன், ராஜன், அபிஷேக், ஐவர், கோபி, சாந்தி மற்றும் சிவகாமி ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மேடை அலங்காரம் செய்து அண்ணன் மணிமுத்து, சுப்பிரமணி, தம்பி ஜோஸ், அபிஷேக், ஐவர், பூர்ணராஜ், மாரி, வீரமணி, சரவணகுமார், வள்ளிக்கண்ணு, நாகமணி, ஹரிகிருஷ்ணன், நாகராஜன், சீனிவாசன், வினாயகம்,
சகோதரி சாந்தி, சிவகாமி, விஜயகீதா, மார்கரெட் வித்யா, ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்த அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநில செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
Nov 05
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி
தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி என்பவரை,04.11.2019 அன்று மாலை தனது சேம்பரில் வைத்து, முறையாக தட்டச்சு செய்யவில்லை என்ற காரணத்திற்காக லெட்டர் பேடினை எடுத்து எறிந்ததில் திருமதி. சாரதியின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டுள்ள
இந்த கொடூரச்செயலை கண்டித்து 05-11-2019 *மாலை 6.00 மணிக்கு நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தினை சிறப்பித்தனர்.
Sep 10
ஓணம் பண்டிகை
Jul 30
நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
30.06.2019 அன்று மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களால் நடத்தப்பட்டது. விழாவினை மரியாதைக்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. விழாவில் தலைமை குற்றவியல் நடுவர், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் சிறப்பை வாழ்த்திப்பேசி சிறப்பித்தனர்.
Jul 27
கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம்
20.07.2019 அன்று கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஐவர் மற்றும் ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில சங்கத்திற்கு tnjeastatecentre.org.in” என்ற இணையம் பதிவு செய்யப்பட்டு அதை வடிவமைத்த கன்னியாகுமரி மாவட்ட System Analist தோழர். ஜாண் சுஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.